அமரர் பரிமளம் (சாரதாதேவி) மகாலிங்கசிவம் அவர்களின் 31 ஆம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்

அன்புடையீர்,
கடந்த 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்த எங்கள் குடும்பத் தலைவி
அமரர் பரிமளம் (சாரதாதேவி) மகாலிங்கசிவம்
(08 ஆம் வட்டாரம், நயினாதீவு, தமிழீழம்)
அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும்
28.04.2026 செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணியளவில்
“ நயினாதீவு கங்காதரணி தீர்த்தக்கரையிலும்” அதனைத் தொடர்ந்து நடைபெறும் வீட்டுக் கிரியைகள் முற்பகல் 11:00 மணியளவில் “அன்னாரது இல்லத்தில்” நடைபெறவுள்ளது.
அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
⸻
நன்றி
இங்ஙனம், குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: மகாலிங்கசிவம் – கணவர்: +14376069899, சுகிர் – மகன்: +14165787512
Condolences (0)
No condolences yet. Be the first to leave a message.